Pages

Friday 28 January 2022

பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் சற்றுமுன் கைது

 Al Mashoora News🇱🇰
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 
-----------------------------------
*2022/01/28*
-----------------------------------


பாணத்துறை பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.


முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த நபர் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரிடம் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்



Wednesday 26 January 2022

 *முடிவுத்திகதி : 27.01.2022*   


⏺ *University of Ruhuna Vacancies*


⏺  *Data Entry Operator*

                                                                                 


⬇️ *#விண்ணப்ப படிவம் மற்றும் விபரங்களுக்கு.* 👉https://www.mrjobs.info/university-of-ruhuna-vacancies-data-entry-operator/



எரிவாயு பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு !

Al Mashoora News🇱🇰


எரிவாயு பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு !
.-----------------------------------
*2022/01/26
-----------------------------------

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களை மீண்டும் ஒப்படைக்க விரும்பும் நுகர்வோருக்கு, அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


அவ்வாறு மீள பெற்றுக்கொள்ளப்படும் எரிவாயு சிலிண்டர்களில் எஞ்சியுள்ள எரிவாயுவின் அளவு, எரிவாயுவின் தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப அளவிட்டு, அதன் விலைக்கேற்ப புதிய எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்யும்போது குறைக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நுகர்வொர் விவகார அதிகாரசபை ஆலோசனை வழங்கியுள்ளது.


அதற்கமைய, எரிவாயு பகிர்ந்தளித்தல் அல்லது, தமது முகவர்களினூடாக எரிவாயு சிலிண்டர்களை மீள பொறுப்பேற்பதை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், அதுதொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பாவனையாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.


அதற்கமைய 1977 என்ற துரித இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் எனவும் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள எரிவாயு முகவர் நிலையங்களுக்கு தொர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


--------------------------------------


#Contact: 0721195455

#Whatsapp Contact 

  👇👇👇👇

wa.me/+94721195455

 -----------------------------------



Monday 17 January 2022

இலங்கையில் கடந்த 15 நாட்களில் அடையாளம் காணப்பட்ட மற்றுமொரு அபாய நோய்

------------------------------

*2022/01/17*

------------------------------

இலங்கையில் இந்த ஆண்டின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவிக்கின்றார்.

மலேரியா காய்ச்சல்
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஐவரும், ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்தவர்கள் என அவர் கூறுகின்றார்.


யாழ்ப்பாணம், கம்பஹா, கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளிலிருந்தே, இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மலேரியா பரவல் குறித்து மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர கருத்து வெளியிட்டார்


”இலங்கைக்குள் மலேரியா பரவும் அபாயம் காணப்படுகின்றது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள ஐந்து நோயாளர்களும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகைத் தரும் பிரஜைகளின் விபரங்களை சேகரிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட் வைரஸ் நாடு முழுவதும் பரவுவதை தடுப்பது போலவே, மலேரியாவை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தடுக்கவில்லை என்றால், மலேரியாவிற்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். மலேரியா காணப்படுகின்ற நாடுகளிலிருந்து வருகைத் தருவோருக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், மலேரியா தொடர்பிலான பரிசோதனைகளை செய்துக்கொள்ள வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.


🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

------------------------------

டெல்டாவை முந்திக்கொண்டு வேகமாக பரவும் ஒமைக்ரோன்!

 டெல்டாவை முந்திக்கொண்டு ஒமைக்ரோன் திரிபு வேகமாக பரவும் நிலை காணப்படுவதாக சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஒவ்வாமை, மூலக்கூற்று நுண்ணுயிர் பிரிவின் தலைவரான கலாநிதி சந்திம ஜீவந்தர (Chandima Jeevanthara) தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தும் ஒமிக்ரோன்

இதனால் இலங்கையின் முக்கிய வைரஸாக ஒமைக்ரோன் வைரஸை தற்போது குறிப்பிடமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 208 ஒமைக்ரோன் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமைக்ரோன் வைரஸ் தொற்றுநோயாளர்களில் பெரும்பாலானோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு, வெளிநாடுகளுக்கு செல்வதற்காக வந்தவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்கள் கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை வதிவிடமாகக் கொண்டவர்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sunday 9 January 2022

 

நாடு முழுவதும் விதைக்கப்பட்டுள்ள இனவாத அரசியல்! யாழில் வைத்து சஜித் பகிரங்கக் குற்றச்சாட்டு


பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் சற்றுமுன் கைது

 Al Mashoora News🇱🇰 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰  ----------------------------------- * 2022/01/28 * ---------------------------------...